கோடை வெப்பம் எதிரொலி மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் கையிருப்பு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

by Staff / 02-05-2022 03:53:02pm
கோடை வெப்பம் எதிரொலி மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் கையிருப்பு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளரும் மத்திய சுகாதார செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். நாடுமுழுவதும் கோடையின் வெப்பம்  டெல்லியில் உள்ளிட்ட வட மாநிலங்கள் 122 ஆண்டுகளில் காணாத அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது தமிழகத்தில் 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்க உள்ளதால் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வெப்பநிலையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது அனைத்து மாநில தலைமைச் செயலாளரும் மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு ராஜேஷ் புஷன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வரவிருக்கும் நாட்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படும் என்பதால் மருத்துவமனைகளில் ஐஸ் பெட்டிகள் தண்ணீர் வினியோகம் உப்பு சர்க்கரை கரைசல் உள்ளிட்ட மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை போதிய அளவில் கையிருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதை உறுதிப்படுத்தவும் தடையில்லா மின்சாரம் விநியோகம் தேவையான இடங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் பயன்படுத்துவதும் குளிர்ச்சியான சூழலை அளிக்கும் வகையில் மருத்துவமனைகளை மாற்றி அமைத்து உள் மற்றும் வெளிப்புறங்களில் நிலவும் வெப்பத்தினை குறைப்பதும் மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நண்பகல் வேளையில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.  தேவையான  அளவில் உணவு தண்ணீர் உள்ளிட்டவைகளை எடுத்துக்கொள்வதும் வெயில் காலங்களில் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதும் உள்ளிட்ட கோடை காலங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை விளம்பரம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via