துப்பாக்கியை கொடுத்து விட்டு டீ குடிக்கச் சென்ற இரு காவலர்கள் சஸ்பெண்ட்
விருதுநகரில் கைதியின் உறவினரிடம் துப்பாக்கியை கொடுத்து விட்டு டீ குடிக்க சென்றதாக இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இருக்கன்குடி காவல் நிலைய காவலர்களான அன்பரசன் ஆறுமுக மேலும் சில நாட்களுக்கு முன் ஜான் பாண்டியன் என்ற விருதுநகர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு அங்கிருந்து கைதியின் உறவினரான மாதேஸ்வரன் என்பவரிடம் அவர்கள் துப்பாக்கியை கொடுத்து விட்டு டீ குடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அந்த துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்த மாதேஸ்வரன் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் சர்ச்சையில் சிக்கியது வெளியாட்களிடம் துப்பாக்கியை கொடுத்து அஜாக்கிரதையாக செயல்பட்டதாக காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
Tags :