ராஜீவ் நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் அஞ்சலி

by Staff / 21-05-2022 01:45:04pm
ராஜீவ் நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். 1991ம் ஆண்டு மே 21ம் நாள் திருப்பெரும்புதூரில் தேர்தல் பொதுக்கூட்டத்தின் போது தற்கொலை குண்டு தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இதன் 31ஆண்டு நினைவு நாளான இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் ஆன வீர்  பூமியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர் மகள் பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via