காவல் நிலையம் அருகே பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை

by Staff / 26-05-2022 05:10:20pm
காவல் நிலையம் அருகே பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை

 புதுச்சேரியில் காவல்நிலையம் அருகே வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கருவடிக்குப்பத்தை  சேர்ந்த ரவுடி சரத் என்கிற பொடிமாஸ் அரியங்குப்பம் காவல் நிலையம் பின்புறம் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்துள்ளார். வீடு புகுந்த  மர்ம கும்பல் வீட்டில் இருந்த சரத்தின் மாமாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அமர வைத்துவிட்டு. சரத் உறங்கிக்கொண்டிருந்தஅறைக்கு  சென்று கழுத்து தலை முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்கள்.  தகவல் அறிந்து வந்த போலீசார்  10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து  5 பேரை கைது செய்து விசரித்தனர்.  விசாரணையில்  முன்விரோதம் காரணமாக ரவுடி சரத் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via