மதுபோதையில் பொதுமக்களை செருப்பால் அடித்த வழக்கறிஞர்

by Staff / 30-05-2022 01:32:19pm
மதுபோதையில் பொதுமக்களை செருப்பால் அடித்த வழக்கறிஞர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மது போதையில் வழக்கறிஞர் ஒருவர் பொதுமக்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அஞ்சாசரி  கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆறுமுகம். மதுபோதையில் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் சாலையில் சென்றவர்களை செருப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே அங்கிருந்து சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து ஆறுமுகம் வாடிக்கையாளர் ஒருவரை செருப்பால் அடித்து துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவரைப் பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via