மதிப்பெண்களைக் குறைத்து விடுவதாக மிரட்டி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அழைத்துவந்த தலைமை ஆசிரியர் கைது.

by Staff / 07-06-2022 11:19:31am
மதிப்பெண்களைக் குறைத்து விடுவதாக மிரட்டி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அழைத்துவந்த தலைமை ஆசிரியர் கைது.

சேலம் மாவடடத்தில் செய்முறை தேர்வு மதிப்பெண்களைக் குறைத்து விடுவதாக மிரட்டி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். தரமங்கலத்தில் உள்ள அந்த தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியரான விஜயகுமார் என்பவர் பல மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கேள்விப்பட்ட முன்னாள் மாணவர் ஒருவர் வாட்ஸப் குழுவில் தன்னுடன் படித்த சக மாணவர்களுக்கு இதனைத் தெரிவித்துஉள்ளர் பெற்றோரும் முன்னாள் மாணவர்களும் அந்த பள்ளியை முற்றுகையிட்டனர் மாணவிகளிடம் விசாரணை நடத்திய மகளிர் போலீசார் தலைமையில் ஆசிரியர் விஜயகுமாரை கைது செய்தனர்.

 

Tags :

Share via