வைகாசி விசாக திருவிழாவிற்கு மதுரையிலிருந்து பழனிக்கு சிறப்பு ரயில் ஒருநாள் மட்டும்

by Editor / 09-06-2022 10:15:27pm
வைகாசி விசாக திருவிழாவிற்கு மதுரையிலிருந்து பழனிக்கு சிறப்பு ரயில் ஒருநாள் மட்டும்

பழனியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (12.6.2022) அன்று வைகாசி விசாக திருவிழா நடைபெற இருக்கிறது. எனவே பயணிகள் வசதிக்காக மதுரை - பழனி ரயில் நிலையங்களுக்கு இடையே சிறப்பு ரயில் ஒன்று இயக்க ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மதுரை - பழனி முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.25 மணிக்கு பழனி சென்று சேரும். மறுமார்க்கத்தில் பழனி - மதுரை முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் பழனியில் இருந்து மதியம் 02.45 மணிக்கு புறப்பட்டு மாலை 05.10 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும்  2 இரண்டாம் வகுப்பு பொது மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.இந்த ரயில்கள் ஜூன் 12 அன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்படும்.
 

 

Tags : The special train from Madurai to Palani for the Vaikasi Visakha Festival is one day only

Share via