ஓமலூரில் வீட்டில் திருடிய திருடனை பிடித்து போலீசில் ஒப்படைப்பு.
சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சி பிருந்தாவனம் தியேட்டர் பின்புறம் வசித்து வரும் சௌந்தரராஜன் இவர் இன்று அதிகாலை நடைபயணம் மேற்கொள்ளும்போது வீட்டில் குடும்ப தலைவர் இல்லாத போது ஒரு திருடன் வீட்டிற்கு உள்ளே சென்று திருடியுள்ளான். அப்பொழுது அக்கம் பக்கம் உள்ளவர்கள் திருடனை பிடித்து ஓமலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவனை பிடித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :