டெல்லிக்கு சென்ற விமானத்தில் பறவை மோதியதால் தீப்பிடித்தது - உள்ளூர் மக்கள் தகவல் கொடுத்ததால் அவசரமாக தரையிறக்கம்
பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்திலிருந்து, தலைநகர் புதுடெல்லிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று பகல் 12 மணியளவில் புறப்படத் தயாரானது. அந்த விமானம் வானில் பறக்க தொடங்கியதுடன், தொழில்நுட்பக் கோளாறால் விமானத்தின் வெளிப்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து, டெல்லி செல்லும் விமானம் அவசரமாக பாட்னா விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியது. அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.185 பயணிகளும் பத்திரமாக இறங்கினர்.
Tags :