சென்னையில் இரண்டு நாட்களில் மது போதையில் வாகனம் ஓட்டிய 287 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் இரண்டு நாட்களில் மது போதையில் வாகனம் ஓட்டிய 287 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கண்டறிய சிறப்பு வாகன தணிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர் அப்போது மது போதையில் கார் ஓட்டிய 67 பேர் இருசக்கர வாகனம் ஓட்டிய 197 பேர் உள்பட மொத்தம் 287 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :