உத்தரபிரதேசத்தில் சாலையோர மரத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து 10 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் சாலையோர மரத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 17 பேரில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 7 பேரில் 5 பேர் மாவட்ட மருத்துவமனையிலும் இரண்டு பேர் பரேலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags :