வாரச்சந்தையில் ஆடு, கோழிகளின் வரத்து அதிகரிப்பால் இறைச்சிகளின் விலை வீழ்ச்சி.

by Editor / 26-06-2022 08:09:50am
 வாரச்சந்தையில் ஆடு, கோழிகளின் வரத்து அதிகரிப்பால் இறைச்சிகளின் விலை வீழ்ச்சி.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் வாரச்சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பு இதனால் விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டதால் ஆடு கோழி வளர்க்கும் விவசாயிகள் மற்றும்வாங்கி விற்கும் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் வாரச்சந்தையில் சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் 8 மணிவரை ஆடு கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி  வாரச் சந்தைக்கு ஆடு கோழிகளை குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம், பல்லடம் , பொங்கலூர் , கர்நாடக உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அந்தந்த பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் , விவசாயிகள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவருவது வழக்கம்.

இங்கு ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும் , இறைச்சிக்காகவும் கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் நீற்று சனிக்கிழமை ஆடுகளின் வரத்து அதிகரித்திருந்ததாலும் இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை குறைவாக இருக்கும் என்பதால் இறைச்சி விற்பனையாளர்கள் ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் கட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.இதனால் கடந்த வாரங்களில் இறைச்சிக்காக வாங்கப்படும் 10கிலோ எடையுள்ள 1ஆடு ரூ. ஆயிரத்து 500க்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ. 4ஆயிரத்தி 500க்கு விலைபோயுள்ளது. ரூ. 12ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடுகள் இந்த வாரம் ரூ. 8ஆயிரத்து 500ஆக குறைந்துவிட்டது. இதனால் விலை விழ்ச்சி ஏற்பட்டது.

கோழிகள் விலை வீழ்ச்சி.

அதேபோல் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மூலம் அதிகாலை 3மணிமுதல் காலை 8மணிவரை ஆயிரக்கணக்கான கோழிகளை  இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன,  வீடுகளில் கோழி மற்றும் சேவல்களை வளர்ப்போர் சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த கோழிகளை வாங்க தாராபுரம், காங்கேயம், பல்லடம் கோவை பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கறிக்கடைக்காரர்கள் நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனர். கோழியின் எடைக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் 1 கிலோ ரூ400 முதல் ரூ. 450வரை விலைபோனது. ஆனால் இந்தவாரம் 1 ஒரு கிலோ 300 முதல் 400 வரை விற்பனையானது.இந்த வாரம் கோழிகள் விலை வீழ்ச்சியாடைந்தே காணப்பட்டன.

 

 

Tags :

Share via