மூதாட்டியை கட்டிப்போட்டு 36 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் கொள்ளை

by Editor / 28-06-2022 11:03:16am
மூதாட்டியை கட்டிப்போட்டு 36 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் கொள்ளை

கோயம்புத்தூர் அருகே மூதாட்டியை கட்டிப் போட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற திருடனை சிசிடிவி  காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். அப்ப நாயக்கன்பட்டியை  சேர்ந்த  ராதா வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அவரின் கை கால்களை கட்டி வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டு . வீட்டில் இருந்து 36 ஆயிரம் ரூபாய்மற்றும் செல்போனை திருடிட்டு  வீட்டை பூட்டிவிட்டு ஒருவன் தப்பிச் சென்றான் .இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர் ஏற்கனவே அந்த வீட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்த நீலகிரியில் சேர்ந்த காளிதாஸ் திருட்டில் ஈடுபட்ட தெரியவந்தது.

 

Tags :

Share via