ராஜஸ்தானில்  காரில் சென்ற  மருத்துவ தம்பதிகள் சுட்டுக்கொலை

by Editor / 29-05-2021 05:15:48pm
ராஜஸ்தானில்  காரில் சென்ற  மருத்துவ தம்பதிகள் சுட்டுக்கொலை


பட்டப்பகலில் மருத்துவ தம்பதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காவல்துறை கண்காணிப்பு காமிராவில் பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.  காட்சியில், காரில் சென்று கொண்டிருந்த கணவன் மனைவியான மருத்துவ தம்பதிகளை இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
இவர்கள் ஒரு சமயத்தில் காரை இடைமறித்து நிறுத்தினர். பின்னர், இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய இருவரும் காருக்கு அருகே சென்று பேசிக்கொண்டு இருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மருத்துவரையும் அவரது மனைவியையும் பல முறை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளான். 
பின்னர், இருசக்கர வாகனத்தில் இருவரும் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விசாரணையில் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக 25 வயது இளம் பெண்ணையும், அவரது ஆறு மாத குழந்தையை கொலை செய்த வழக்கில் இந்த மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via