குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று மாலை முதல் மிக கனமழை பெய்ததால் குற்றாலமெயினருவி,ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இரண்டாவது நாளாக குற்றாலமெயினருவி,ஐந்தருவி ஆகிய அருவிகளில் குளிப்பதற்கு தடை நீடித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்அடைந்துள்ளனர்.பழைய குற்றாலம் அருவியில் மட்டும் குளிக்க அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
Tags : Tourists banned from bathing in Kurdala falls for second day