மாலத்தீவுக்கு தப்பி சென்றா இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச

by Editor / 13-07-2022 11:47:41am
மாலத்தீவுக்கு தப்பி சென்றா இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச

போராட்டங்கள் வலுத்து உள்ள சூழலில் அதிபர் கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு அண்டை நாடான மாலத்தீவுக்கு தப்பிச் சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் கையெழுத்திட்ட ராஜினாமா கடிதம் இன்று சபாநாயகரிடம் அளிக்கப்பட உள்ளது. அண்டனோவ்  32 என்ற  ராணுவ விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே அவர் மனைவி பாதுகாவலர் உள்பட 4 பேர் தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபரின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிடுவது சில மணி நேரம் முன்பு முன்பாக அங்கிருந்து தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே கடற்படை கப்பலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகின.

 

Tags :

Share via