கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா சிலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- "தமிழகம் முழுவதும் இன்று 32வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஒரே நாளில் 18.8 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். செஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வரும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் குரங்கம்மை பரிசோதனை செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம். கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா போன்ற கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அது வெறும் பத்திரிகைகளில் வந்த செய்தி மட்டுமே" என்றார்.
Tags : Statue in the shape of a pen in the ocean is not an official announcement - Minister Subramanian