செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

by Editor / 25-07-2022 01:04:44pm
செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ்  ஒலிம்பியாட் தொடர்பான முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னை அடுத்த மாதம் புதுச்சேரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 157 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்து விமானம் மூலம் வீரர்கள் பயிற்சியாளர்கள் சர்வதேச சங்கத்தின் பிரதிநிதிகள் சென்னை வந்த பின்னரும் போட்டி நடைபெற இருப்பதை முன்னிட்டு பூஞ்சேரி ஈசிஆர் சாலை ஓஎம்ஆர் சாலை 53 கோடி ரூபாய் செலவில்  பொதுப்பணித் துறையினரால் மேம்படுத்தப்பட்டுள்ளது. விளக்கு மின்கோபுரம் சிசிடிவி கண்காணிப்பு கேமரா கோபுரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை சார்பில் 7 மருத்துவ குழுக்கள் 30ஆம் பிரின்ஸ்பல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன .போட்டி நடைபெறும் இடத்திற்கு பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு பேருந்து சேவை இயக்கப்பட உள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது 34 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட 707 சென்சர் வசதி கொண்ட சேஸ் போர்டுகள் ஒத்திகை பார்க்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒத்திகை போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் விஷ்ணுபிரசாத் பிரசன்னா 9 சுற்றுகளில் வெற்றி பெற்றார் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து வரும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்ய சென்னை விமான நிலையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

Tags :

Share via