தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நட கூடாது அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

by Editor / 25-07-2022 08:46:29pm
தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நட கூடாது  அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நட கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டது.
அப்போது, 10 ஆண்டுக்குள் தமிழக வனப்பகுதிகளில் உள்ள அனைத்து அன்னிய மரங்களும் அகற்றப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “அறிக்கைகளை மட்டுமே தாக்கல் செய்யும் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. அன்னிய மரங்களை அகற்ற கொள்கை முடிவெடுத்துள்ள அரசே யூக்கலிப்டஸ் மரங்களை ஏன் நடுகிறது? இனி தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : The High Court ordered the government not to plant any more eucalyptus trees in Tamil Nadu

Share via