அதிக பணத்திற்கு அதிக வட்டி பெறலாம் எனக் கூறி நூதன முறையில் மோசடி
கோயம்புத்தூர் அருகே தனியார் வங்கியில் அதிக பணம் செலுத்தினால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி நூதன முறையில் 15 லட்ச ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஜோதிபுரம் அருகே ராணி மற்றும் பாக்கியலடசுமி இருவரும் அருகருகே வசித்து வந்த நிலையில் தனியார் வங்கிகள் தனது மகன் சதுரகிரி வேதநாதன் பணிபுரிந்து வருவதாகவும் அவரின் வங்கியில் பணத்திற்கு அதிக வட்டி பெறலாம் எனவும் பாக்கியலட்சுமி கூறியுள்ளார். ராணி கடந்த 2014ஆம் ஆண்டு 15 லட்சத்தை கொடுத்த நிலையில் பணம் செலுத்தியதற்கான போலி ரசீதையும் கொடுத்து உள்ளனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இரண்டு ஆண்டிற்கு முன்பு இருவர் மீது போலீசில் புகார் அளித்தார்.
Tags :