ஒரே குடும்பத்தை சார்ந்த சகோதர,சகோதரிகள் 4 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்

by Editor / 31-07-2022 10:31:41pm
ஒரே குடும்பத்தை சார்ந்த சகோதர,சகோதரிகள்  4 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை சேர்ந்தவர் அனில் பிரசாத் மிஸ்ரா. கிராம வங்கி மேலாளரான இவருக்கு யோகேஷ் மிஸ்ரா லோகேஷ் மிஸ்ரா ஆகிய 2 மகன்களும், ஷாமா மிஸ்ரா, மாதுரி மிஸ்ரா ஆகிய 2 மகள்களும் என மொத்தம் 4 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் தந்தை அனில் பிரசாத் மிஸ்ரா கிராம வங்கியில் வாங்கும் குறைந்த சம்பளத்தில் கஷ்டப்பட்டு  லட்சியத்துடன் படிக்க வைத்துள்ளார்.அவரது உயரிய கனவை அவரது 4 பிள்ளைகளும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளாக தங்களை தரம் உயர்த்தி கொண்டு உள்ளனர். ஒரே குடும்பத்தை சார்ந்த சகோதர,சகோதரிகள்  இந்திய அரசின் உயரிய படிப்பினை படித்து சாதனைபடைத்துள்ளனர்.இந்த குடும்பத்தினர் நாட்டிலுள்ள இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளனர்.

 

Tags :

Share via