தனியார் பள்ளி வாகனம் மோதி தாய் கண் முன்னே ஒன்றரை வயது குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி தாய் கண் முன்னே ஒன்றரை வயது குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லத்துவாடி கிராமத்தை சேர்ந்த காசி சுதா தம்பதிக்கு 4 வயது மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இன்று காலை வழக்கம்போல் தனது 4 வயது மகள் வித்ஸ்ரீயை பள்ளி வளாகத்தில் ஏற்றிவிட சென்றாள் அப்போது தாயைப் பின்தொடர்ந்து வந்த ஒன்றரை வயது குழந்தை பவானி ஸ்ரீ பள்ளி வாகனத்தில் முன்பாக சென்றதாக கூறப்படுகிறது. இதனை சுதா கவனிக்காத நிலையில் ஓட்டுநர் பள்ளி வாகனத்தை இயக்கி அதில் முன்பக்க சக்கரத்தில் சிக்கி குழந்தை உடல் நசுங்கி உயிரிழந்தது தாய் கண்முன்னே குழந்தை உயிரிழந்த நிலையில் தாய் கதறி அழுதார் தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :