இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 30,549 பேருக்கு தொற்று

by Admin / 03-08-2021 12:57:41pm
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 30,549 பேருக்கு தொற்று



   
கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,195 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 30,549 பேருக்கு தொற்று
கொரோனா வைரஸ் பரிசோதனை
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,17,26,507 ஆக உயர்ந்துள்ளது.

 நாடு முழுவதும் ஒரே நாளில் 422 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,195 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,08,96,354 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 38,887 பேர் குணமடைந்துள்ளனர்.
 
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,04,958 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 47,85,44,114 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via