திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாத அங்கப்பிரதட்சண டோக்கன் 22ம் தேதி வெளியீடு

by Editor / 19-08-2022 12:09:07pm
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாத அங்கப்பிரதட்சண டோக்கன் 22ம் தேதி வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் வரும் 22ம் தேதி காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆனால் செப்டம்பர் மாதம் 27ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரை பிரம்மோற்சவ விழாவையொட்டி அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அங்கப்பிரதட்சண டோக்கன்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு திருமலைதிருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Tags :

Share via