தமிழகத்தில் பல மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

by Editor / 18-11-2021 05:01:05pm
தமிழகத்தில் பல மாவட்டங்களில்  நாளை பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையினால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நாளை விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

 வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவிப்பு.  மாணவர்களை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தல்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்  கனமழை காரணமாக   அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
 

 

Tags :

Share via