தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு

by Editor / 19-08-2022 02:44:10pm
தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு

தென்காசி மாவட்டத்தில் நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் 20.08.2022 அன்று நடைபெறும் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251 வதுவீரவணக்க நாளை முன்னிட்டும்,01.09.2022 அன்று நெற்கட்டும்செவல் கிராமத்திலுள்ள உள்ள சுதந்திர போராட்ட வீரர் மன்னர் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வரும் நபர்கள் நான்கு..நான்கு நபர்களாக வருவதற்க்கும், மரியாதை செலுத்த  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பாக  சங்கரன்கோவில், திருவேங்கடம், கடையநல்லூர், சிவகிரி ஆகிய தாலுகாக்கள், புளியங்குடி காவல் நிலைய எல்லை ஆகிய பகுதிகளில் இன்று முதல் வரும் 02.09.22 வரை 15 நாட்களுக்கு 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் அன்னதானம் செய்யவோ,பால்குடம்,முளைப்பாரிஊர்வலம், பொங்கலிடுதல்,ஆயுதம் கொண்டுவரும் வாகனங்கள் வரவோ ஊர்வலம் செல்லவோ தடை செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


 

 

Tags :

Share via