ராகுல் காந்தியின் உதவியாளர் உள்ளிட்ட 4 காங்கிரஸ் கட்சியினர் கைது

by Editor / 19-08-2022 04:00:07pm
ராகுல் காந்தியின் உதவியாளர் உள்ளிட்ட 4 காங்கிரஸ் கட்சியினர் கைது

காந்தியின் படத்தை அவமதித்த வழக்கில் ராகுல் காந்தியின் உதவியாளர் உள்ளிட்ட 4 காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.வயநாட்டில் ராகுல் காந்தி எம்பி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது காந்தி படத்தை அவமதித்த வழக்கில் எம்.பி.யின் பி.ஏ ரதீஷ், நௌஷாத், முஜீப், ராகுல் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் ராகுல் காந்தியின் அலுவலக ஊழியர்கள் ஆவர்.

எஸ்எப்எப் ஆர்வலர்கள் ராகுல் காந்தியின் அலுவலகத்தை முற்றுகையிட்ட போது, நடந்த வன்முறையில் சுவரில் காந்தியின் படம் இருந்தது. ஆனால் பின்னர் அது தரையில் உடைந்த நிலையில் காணப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அன்றிலிருந்து காங்கிரஸ் தொண்டர்களே இதை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. விசாரணையை தொடர்ந்து 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராகுல் காந்தியின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதை விட, அலுவலகத்தில் வாழைப்பழம் வைக்கப்பட்டதை விட காந்தி படத்தை அவமானப்படுத்தியது பெரிய விஷயமாக இருந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் பெரிய அளவில் பிரச்சாரம் செய்தது. ஆனால் தற்போது இந்த விவகாரத்தில் காங்கிரஸ்காரர்களே காந்தி படத்தை அவமதிக்கும் அளவிற்கு நடந்துள்ளதாக விசாரணை நடக்கிறது.

 

Tags :

Share via