அண்ணா பிறந்த நாளையொட்டி கைதிகள் 8 பேர் இன்று விடுதலை

by Editor / 25-08-2022 02:00:03pm
அண்ணா பிறந்த நாளையொட்டி கைதிகள் 8 பேர் இன்று விடுதலை

அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்டகாலம் ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து, முன்விடுதலை செய்ய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி வேலூர் மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் 47 கைதிகளை விடுதலை செய்ய பரிந்துரை குழு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இன்று 2-வது கட்டமாக 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் 7 பேர் 10 ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனை கைதிகள்.

 

Tags :

Share via