கலப்பட டீசலுடன் லாரி பறிமுதல் ஐந்து பேர் கைது.
கோவை, சேலம், சங்ககிரி, நாமக்கல், திருசெங்கோடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த நிலையில் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் படகுகளுக்கு விற்பனை செய்யும் பொருட்டு கலப்பட டீசல் தொழிற்சாலையை காவல்துறை கண்டுபிடித்தது.பெங்களூருவிலிருந்து கொண்டு வந்து க்குடோனில் மறைத்து விற்பனை செய்து வந்த 33 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன் லாரி பறிமுதல் ஐந்து பேர் கைது ஏ.டி.எஸ்.பி.சந்திஸ் தலைமையிலான போலீசார் அதிரடி நடவடிக்கை.மேலும் திமுக நகர மீனவர் அணி செயலாளர் டேனியலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :