திருநெல்வேலியில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் 18 இடங்களில் 30 ஒளிரும் மின்விளக்குகள்

by Editor / 09-09-2022 08:59:08pm
திருநெல்வேலியில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில்  18 இடங்களில் 30 ஒளிரும் மின்விளக்குகள்

திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சாலை விபத்து அதிகமாக ஏற்படும் பகுதியாக அரியகுளம் அருகே சாரதா கல்லூரி விலக்கு, தாழையூத்து அருகே படைசாமி ராசாகோயில், மூன்றடைப்பு ஜங்ஷன், பானஙன்குளம் ஜங்ஷன், மறுகால்குறிச்சி, வாகைகுளம் அப்பா கல்லூரி, வாகைகுளம், பெருமளஞ்சி ஜங்ஷன், தளபதி சமுத்திரம், வள்ளியூர் RDO ஜங்ஷன், மாஞ்சில் ஜங்ஷன் வள்ளியூர், கலந்தபனை ஜங்ஷன், லெப்பைகுடியிருப்பு, பணகுடி தெற்கு பாலம், நெருஞ்சி காலனி, தண்டையார்குளம், புண்ணியவாழன்புரம் ஆகிய இடங்கள் விபத்து ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டு  அப்பகுதியில் தொடர்ந்து சாலை விபத்துகள் நிகழ்வதை தடுக்கும் வண்ணம்  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அறிவுரையின் படி அப்பகுதிகளில் 18 இடங்களில் 30 ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via