100% தடுப்பூசி என்ற இலக்கை எட்டிய கே.தளவாய்புரம் கிராமம்

by Admin / 07-08-2021 01:23:31pm
100% தடுப்பூசி என்ற இலக்கை எட்டிய கே.தளவாய்புரம் கிராமம்

தமிழ்நாட்டில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பகுதியாக கே.தளவாய்புரம் மாறியுள்ளது.

அந்தக் கிராமத்தில் மொத்தம் 514 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி வாய்ந்தவர்கள். இங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்தநிலையில் நேற்றுடன் கே தளவாய்புரம் கிராமத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், கே தளவாய்புரம் கிராமத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு அனைத்து கிராமங்களையும் 100 சதவீதம் என்ற இலக்கை எட்டி ஊக்கப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
 

 

Tags :

Share via