சிறுவனை கட்டி வைத்த அர்ச்சகர்

by Editor / 11-09-2022 03:17:38pm
சிறுவனை கட்டி வைத்த அர்ச்சகர்

மத்திய பிரதேசத்தின் சாஹர் பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில் பாதாம் பருப்பை திருடியதாக 11 வயது பட்டியலின சிறுவனை, கோவில் அர்ச்சகர் மரத்தில் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் மோதி நகர் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர். அப்போது, பூஜை தட்டில் இருந்த பாதாம் பருப்பை, சிறுவன் திருடியதாக அந்த அர்ச்சகர் போலீசாரிடம் கூறியுள்ளார். பின்னர் அந்த அர்ச்சகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

Tags :

Share via