திரைப்பட இயக்குனர் மற்றும் காவல் துறையினர் உட்பட ஆறு நபர்களுக்கு மூன்றாண்டுகள் சிறை

by Editor / 13-09-2022 09:20:00pm
திரைப்பட இயக்குனர் மற்றும் காவல் துறையினர் உட்பட ஆறு நபர்களுக்கு மூன்றாண்டுகள் சிறை

இலங்கை நாட்டைச் சேர்ந்த கஜன் என்பவருக்கு இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்ததாக கடந்த 2012 ஆம் ஆண்டு க்யூ பிரிவு காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது

இந்த வழக்கில் குண்டக்க மண்டக்க திரைப்படத்தின் இயக்குனர் அசோகன் மற்றும் கூப்பாச்சி கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகிய இருவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் மேலும் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ரவிச்சந்திரன் மற்றும் அசோக் குமார் மன்னார்குடியில் தபால் துறையில் பணிபுரிந்த மகாராஜன் சென்னையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த லோகநாதன்  ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.

மேலும் இந்த வழக்கில் இந்திரஜித் ஈசன் பத்மநாபன் ஆகிய மூன்று பேரும் தலைமறைவாக உள்ள நிலையில் காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via