செல்பி எடுத்தபோது ஏரியில் தவறி விழுந்து 2 பேர் பலி

by Editor / 19-09-2022 09:46:07am
 செல்பி எடுத்தபோது ஏரியில் தவறி விழுந்து 2 பேர் பலி

குன்றத்தூர் அருகே உள்ள தரப்பாக்கம் பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் விக்னேஷ் (20), கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். அதே தரப்பாக்கத்தை சேர்ந்தவர் ரிச்சர்ட்ஸ் (16). இவர் அங்குள்ள பள்ளியில் +2 படித்து வந்தார். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப்பார்க்க சென்றனர். செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்த்துவிட்டு, ஏரிக்குள் இறங்கி அங்கிருந்த சிறிய மதகில் ஏறி நின்றபடி தங்களது செல்போனில் செல்பி எடுத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் செம்பரம்பாக்கம் ஏரிக்குள் தவறி விழுந்துவிட்டனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் விக்னேஷ், ரிச்சர்ட்ஸ் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு  2 பேரின் உடல்களையும் மீட்டனர்.

 

Tags :

Share via