காவல்நிலையத்தில் சரக்கடித்த காவலர்கள் -இணையத்தில் வைரலாகும் வீடியோ

by Editor / 19-09-2022 11:24:02pm
காவல்நிலையத்தில் சரக்கடித்த காவலர்கள் -இணையத்தில் வைரலாகும் வீடியோ

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம்  கவுலிப்பள்ளியில் அமைந்துள்ளது  காவல் நிலையம். இந்த காவல்நிலையத்தில் நேற்று இரவு பணியிலிருந்த மூன்று காவலர்கள் மேசை மீது இருந்து புகார் கோப்புகளைக் கீழே தள்ளிவிட்டு, அதில் மது பாட்டில்களை அடிக்கி வைத்து பின்னர் மூன்று போலீசார் அமர்ந்து மது குடித்துள்ளனர். போதையில் இவர்களே தங்கள் மது குடிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதனை சில காவலர்களுக்கு அனுப்பியதாக கூறப்ப்டுகிறது.இதனை சில காவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியதாக கூறப்ப்டும் நிலையில் சில இந்த வீடியோ காட்சிகளை வெளியே பரப்பியுள்ளனர்.தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த இணைய வாசிகள் பலரும் காவல்நிலையத்தில் மது குடித்த மூன்று காவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் குற்றங்களைத் தடுக்கும் போலீசாரே  குற்றச் செயலில் ஈடுபடுவது நியாயமா..? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கர்நாடகா டி.ஜி.பி தெரிவித்துள்ளார். 

 

Tags :

Share via