கனடாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
கனடாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.வெறுப்பு, வன்முறை மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், கனடாவில் உள்ளவர்கள் மற்றும் அங்கு செல்வோர் விழிப்புடன் இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
குற்றங்கள் மற்றும் அட்டூழியங்கள் குறித்து கனேடிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கனடாவிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் தூதரகங்கள் கனேடிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் அங்கு பயணம் செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடிமக்கள் மற்றும் மாணவர்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய துணைத் தூதரகங்கள் அல்லது madad.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் இந்த அறிவுறுத்தலை தொடர்பு கொள்ளுமாறும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags :