மோடிக்கு எதிராக தாக்குதல் நடத்த பிஎப்ஐ திட்டம்

by Staff / 24-09-2022 11:49:51am
மோடிக்கு எதிராக தாக்குதல் நடத்த பிஎப்ஐ திட்டம்

பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு திட்டமிட்டதாக அமலாக்கத்துறை தகவல் அளித்துள்ளது. கேரளாவில் கைது செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா பிரமுகர் ஷபீக் பாயம் என்பரின் வாக்குமூலத்தில் இது தெரியவந்ததாக ரிப்போர்ட் அளிக்கப்பட்டது.
ஜுலை 12ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் திட்டமிட்டதும் அம்பலமாகியுள்ளது. இதற்காக முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

120 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்து, பணம் வசூலித்தது, பயங்கரவாதிகளுடன் தொடர்பு, ஆள்சேர்ப்பு, தேச நலனுக்கு எதிராக செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டது உள்ளிட்டவற்றுக்காக பணம் வசூலிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் என்ஆர்ஐ கணக்குகள் மூலம் பணம் அனுப்பியதும், அமலாக்கத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.மேலும், ஷபீக் பாயத்திற்கு கத்தார் நாட்டில் இருந்து பாப்புலர் ப்ரண்ட் நிர்வாகி பணம் அனுப்பியதும் தெரியவந்துள்ளது. இது குறித்து கூடுதல் விசாரணை நடைபெற்று வருகின்றது.

 

Tags :

Share via