காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமின் மனுவை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் மனு தாக்கல்

by Staff / 24-09-2022 01:13:35pm
காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமின் மனுவை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் மனு தாக்கல்

மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி வியாபாரியிடம் 10 லட்சம் பணம் பறித்ததாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டது பின்னர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.இந்நிலையில் நீதிமன்றம் நிபந்தனைகளை பின்பற்றாமல் சாட்சியங்களை கலைக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளார்.

எனவே, இவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், காவல் ஆய்வாளர் வசந்தி நீதிமன்ற நிபந்தனையை மீறி வழக்கின் எதிரிகளை சந்தித்து தனக்கு சாதகமாக சமாதானமாக போவதாக கூறி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது நீதிமன்றத்தின் நிபந்தனையை மீறி சாட்சிகளை மிரட்டும் விதமாக உள்ளது.

எனவே, நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனையை மீறி உள்ளார். எனவே இவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.இதனைத் தொடர்ந்து நீதிபதி மனு குறித்து காவல் ஆய்வாளர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவு.
 

 

Tags :

Share via