பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ மணி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார்.

by Staff / 24-09-2022 02:43:00pm
 பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ மணி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார்.


சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொட்டியபுரம் பகுதியில் மயானம் செல்லும் பாதை தார்சாலையாக மாற்றவும், சட்டூர் பகுதியில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க குடிநீர் குழாய் அமைக்கும் பணியையும், அதேபோல் சின்னநடுப்பட்டியில் மாரியம்மன் கோவில் சுற்றிலும் பேவர் பிளாக் சாலை அமைக்கவும் சுமார் 15லட்சம் மதிப்பீட்டில் எம்எல்ஏ மணி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எம்எல்ஏ மணிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் ஒன்றிய கவுன்சிலர்கள் சுதா அய்யனார், சரவணன், பேரூராட்சி அம்மா பேரவை செயலாளர் தளபதி, இலக்கிய அணி செயலாளர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன், ஒப்பந்ததாரர் சதாசிவம், செந்தில்குமார், எம்ஜிஆர் இளைஞரணி தலைவர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via