9ம் வகுப்பு மாணவியை கற்பழித்த இளைஞர்கள்

by Staff / 24-09-2022 03:56:12pm
 9ம் வகுப்பு மாணவியை கற்பழித்த இளைஞர்கள்


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.மாணவியின் தந்தைக்கு குடிப்பழக்கம் இருப்பதை அறிந்த பிரதாப், பாக்கெட் சாராயத்தை மாணவியின் தந்தைக்கு கொடுத்து வீட்டில் மயக்கம் போட வைத்துள்ளார். பின்பு, மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இவை தொடர்ந்து நீடித்து வந்துள்ளது.இந்த விவகாரம் பிரதாப்பின் நண்பர் புவனேஸ்(21) என்பவருக்கும் தெரியவந்துள்ளது.புவனேஸ் மாணவியிடம் ஆறுதலாக பேசுவது போன்று நடித்து, பிரதாப்பை போன்று தந்தைக்கு சாராயம் கொடுத்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த சில நாட்களாக அடிக்கடி தனித்தனியாக 2 இளைஞர்கள் மாணவியின் வீட்டிற்கு வந்து செல்வதை பார்த்த கிராம மக்கள் மாணவியை கடுமையான சொற்களால் திட்டியுள்ளனர். இதனால் மனவேதனையடைந்த மாணவி நேற்றிரவு வீட்டில் துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போதை தெளிந்து எழுந்த மாணவியின் தந்தை தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தன. மாணவி பயன்படுத்திய செல்போனை துப்பு துலக்கிய போது புவனேஸ், பிரதாப் ஆகியோர் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதன் மூலம் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via