இருளில் புதுச்சேரி-அமைச்சர் நமச்சிவாயம் அவசர ஆலோசனை

by Editor / 01-10-2022 11:07:52pm
இருளில் புதுச்சேரி-அமைச்சர் நமச்சிவாயம் அவசர ஆலோசனை

புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார்மயமாக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, மின் துறை ஊழியர்கள் உருவாக்கிய போராட்ட குழு செப்.28-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின்பராமரிப்பின்றி மின் தடை ஏற்பட்டுள்ளது. சீர் செய்ய ஆளின்றி நீண்ட நேரம் மின் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இன்று 2 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக புதுச்சேரி இருளில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் தொடர் மின்வெட்டு குறித்து தலைமை செயலர், உயர் அதிகாரிகளுடன் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via