ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள சிங்கார கோட்டையைச் சேர்ந்தவர் 52 வயது பூமிநாதன் இவர் தனது வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முற்பட்ட பொழுது திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ரயில் மோதியதில் பூமிநாதன் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து இருப்புப் பாதை சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு சென்று பூமிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags :