கஞ்சா விற்ற 3 பேர் கைது
திண்டிவனம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஒலக்கூர் சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பாதிரி ஏரிக்கரையில் கஞ்சா விற்ற அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அஜய், 21; என்பவரை கைது செய்து, 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் பாதிரி சுடுகாடு அருகே கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தீனா, 22; என்பவரை கைது செய்து, 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திண்டிவனம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் ரோந்து சென்ற போது, நகராட்சி பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்ற ஏரிக்கரை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முனுசாமி மகன் செம்மணி, 26; என்பவரை கைது செய்து, 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags :