சென்னையில் ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவை தொடக்கம்..!

by Editor / 06-10-2022 11:16:27pm
சென்னையில் ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவை தொடக்கம்..!

இளையத்தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் கடந்த 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார். அதையடுத்து, தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் 4 நகரங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் 5ஜி சேவையை முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில்,சென்னையில் ஏர்டெல் நிறுவனம் ஜியோவை முந்தி 5ஜி சேவையை  இன்று முதல் தொடங்கியு ள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு இளையத்தலைமுறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

Tags :

Share via