மகனை நரபலி கொடுத்த கொடூர தந்தை

by Staff / 08-10-2022 01:10:35pm
மகனை நரபலி கொடுத்த கொடூர தந்தை

பீகார் பாங்கா மாவட்டம் மஹோடா கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் குஷ்பூ தேவி மற்றும் தீபக் சர்மா, இவர்களுக்கு 7 வயதில் ராகவ் குமார் என்ற ஒரு மகன் இருந்தார். தீபக் சர்மா மந்திர தந்திரம் போன்ற மூட நம்பிக்கைகளில் மிகுந்த ஆர்வம் உடையதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் விஜயதசமி நாளன்று அவரது மகனை கழுத்தை நெறித்து நரபலி கொடுத்துள்ளார்.இது குறித்து அவரது மனைவி குஷ்பூ தேவி அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via