வீட்டில் பிரசவம் பெண்ணும், குழந்தையும் பலி
கேரளாவின் கொல்லம் அருகே கல்லிக்காட்டைச் சேர்ந்த அஸ்வதி என்பவர் உயிரிழந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும், ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
நள்ளிரவு 1 மணியளவில் வலி ஏற்பட்டதையடுத்து அஸ்வதி வீட்டில் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த நேரத்தில் குடிக்க தண்ணீர் கேட்டதாகவும், தண்ணீரை குடித்துவிட்டு மயக்கமடைந்து அவல் விழுந்ததாகவும் கணவர் அனில் கூறியுள்ளார். தொடர்ந்து சிறிது நேரத்தில் குழந்தை இறந்துள்ளது. அனில் அதிகாலையில் அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அஸ்வதி ஐந்து மாதங்களுக்கு முன்பு வரை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அதன் பிறகு வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். முன்னதாக அஸ்வதி வீட்டில் பிரசவம் பார்த்ததாகவும், குழந்தை இறந்ததாகவும் அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அஸ்வதி மற்றும் குழந்தையின் உடல்கள் பாரிப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :