குட்டையில் மீன் பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் மூழ்கி பலி.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிபினேஷன், ராகவன் நந்தகிஷோர் ஆகிய மூன்று சிறுவர்களும், தவிட்டுப்பாளையம் காமராஜர் நகர் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வந்தனர்.
இந்நிலையில் இந்த 3 சிறுவர்களும் அந்தியூர் அருகே உள்ள நாட்ராயன் நகர் பகுதியில் உள்ள செங்காட்டு குட்டை என்ற குட்டையில் மாலை மீன் பிடிக்க சென்றுள்ளனர். 3 சிறுவர்களையும் வெகுநேரமாகியும் காணததால் பெற்றோர்கள் தேட தொடங்கியபோது தான் சிறுவர்கள் நீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அந்தியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 3 சிறுவர்களின் உடலையும் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :