நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 நபர்கள் கைது

by Editor / 12-10-2022 10:32:59pm
நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 நபர்கள் கைது

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குரண்டி பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து சார்பு ஆய்வாளர் வீரணன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, குரண்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் அவரது வீட்டின் முன்பு கையில் வைத்திருந்த துப்பாக்கியை கைப்பற்றிய காவல்துறையினர் அங்கிருந்த புள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சோனை, சிவன் தப்பிச் செல்ல முயன்ற போது காவல் சார்பு ஆய்வாளர் வீரனன் அவர்களை விரட்டிப் பிடித்து விசாரனை செய்ததில்  புள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த விஜி என்ற விஜய் என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு துப்பாக்கி கொடுத்துச் சென்றதாக பாலமுருகன் ஒப்புக்கொண்டார். மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதாகவும் கூறினர். எந்தவித அரசு அனுமதியும், உரிமமும் இன்றி மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடும் எனத் தெரிந்து நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த பாலமுருகன், சோனை, சிவன் ஆகியோர் மீது ஆவியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via