தாயை வீட்டின் மாடியிலிருந்து தள்ளி கொன்ற மகன்

by Staff / 19-10-2022 01:05:52pm
தாயை வீட்டின் மாடியிலிருந்து தள்ளி கொன்ற மகன்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நியூ அசோக் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சரஞ்ஜித் கவுர் (65) என்ற மூதாட்டி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். தனக்குப் பிடித்தமான உணவை சமைத்து பரிமாறவில்லை என்று மூதாட்டியின் இளைய மகன் சுரீந்தர் சிங் சரஞ்சித்துடன் வாய் தகராறில் ஈடுபட்டதாகவும், இதுவே கொலைக்குக் காரணமானதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை மதியம் தனக்குப் பிடித்தமான உணவை தயார் செய்யும்படி தனது தாயிடம் கூறினார். ஆனால் சரஞ்ஜித் கவுர் உணவை சமைத்து பரிமாற மறுத்துவிட்டார். அப்போது சுரீந்தர் சிங் தனது தாயுடன் வாய் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரமடைந்த வாலிபர் தாயாரை அடித்துள்ளார். அடியில் இருந்து தப்பிக்க வீட்டின் இரண்டாவது மாடிக்கு ஓடிய சரண்ஜித் கவுரை கீழே தள்ளினார். அவர் கீழே விழுந்த பின்னரும் மகன் தாயை மீண்டும் அடித்ததாகவும், தடுக்க வந்த தந்தையையும் தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், தலைமறைவான குற்றவாளியை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via