கல்லூரி விடுதியில் விஷம் குடித்து தற்கொலை

by Staff / 23-10-2022 12:59:06pm
கல்லூரி விடுதியில் விஷம் குடித்து தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிகில்(21) என்ற மாணவன் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் மாணவன் நிகில் கல்லூரி விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவன் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், தற்கொலை செய்வதற்காக மாணவன் நிகில் ஆன்லைனில் விஷம் வாங்கியது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via